மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 15 செப்டம்பர், 2011

வஞ்சம்

நெஞ்சம் புண்ணாக்க 
வஞ்சம் சுமந்து வசைபாடி 
பொங்கும் இன்பத்தால் 
மகிழ்வாகும் நெஞ்சங்களே 
எங்கும் பொங்கும் வஞ்சம் 
எம்மையும் சூழும் 
அன்று நெஞ்சமும் 
வலியால் வாடும் 
நாம் விதைத்த வஞ்சம் 
அவர்கள் நெஞ்சத்தையும் 
பாடாய் படுத்தியதை 
உணரும்  நெஞ்சம் 
வஞ்சம் கூறாது வாழும் .