கிளி தரும் மனனம்
கண்டோம்
அதற்கு உரைத்தவர்
பெருமை கண்டு
உலகமேவியந்தது ...
பெற்றவர்தம்
பிள்ளையின் வாயால்
பொல்லாத
வார்த்தை
கண்டோம்
செப்பிய மாந்தர்
நாம்தான் !
செய்பிழை
அறியமாட்டோம்
தெரிந்தும்
திருந்தமாட்டோம் !
மனம் கொண்ட
கர்வத்தின்
வயிரம்
மாந்தராய் நாம்
வாழ வேண்டின்
மாயயை விலக்க வேண்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக