உண்மையின் விழிப்பு
உணர்த்திவிட்ட உணர்வும்
தடம் தவறாமல்
தாயகமந்திரத்தின்
தனிவழிச் சிறப்பை
மானம் இளந்தவருக்கும்
மதிகெட்ட அரசுக்கும்
அழிவின் போது
வேடிக்கை பார்த்த
உலக அரசுகளும்
உணர்ந்து கொள்ள
உணர்ந்து கொள்ள
தேவையை உணர்ந்து
தெரிவிற்கு ஒப்பிசைந்த
கலங்கரை விளக்குகளாம்
நம்தமிழ் உறவுகளே
நாம் சோரம் போகாதவர்கள்
நமக்கு இனி துயரம் இல்லை
ஒன்றுபட்டால்
உண்டுவாழ்வு
ஒருதலைமையே
நமக்கான உயர்வு!!!
மாண்பு மிகு முதல்வனின்
முதல்வருக்கும்
வெற்றி வாகை சூடவைத்த
எம் இனிய உறவுகளுக்கும்
உலகதமிழர்களின்
ஒன்றிணைந்த வாழ்த்துக்கள்
இன்றுபோல் எண்றும்
உரிமைகளை வென்று
உதயமதைகண்டு
தமிழினம் தலைநிமிர
எல்லோரும் ஒன்றுபடுவோம்.
அருளீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக