பொங்கிச் சொரியிது
வெண்மழை
தங்கிக்குவியிது
கால்கள் மறுக்கிறது
நடைதர
கண்ணில் தெறிக்கிறது
வெண் ஒளி
கால தேவனின்
செயல் வழி
கண்ட இளையவர் குதுகளி
கையில் அள்ளி அவர் தன்பணி
உருவம் அமைப்பதும்
உருட்டி எறிவதும்
இவர் உறுதுணை போனவர்
குளிரினில் தவிப்பதும்
இளையவர் திரும்பிட
மறுப்பதும்
குதுகலம் காண
மக்கள் கூடுவதும்
பனிமலைஏறி
பள்ளத்தில் சறுக்குவதும்
வெல்வது யார் என்ற
வேகமும் பார்ப்பதும்
சாதனை புரிந்தவர்
வெற்றி கேடையம்
பரிசாய் பெறுவதும்
தவறி விழுந்தவர்
கை கால் உடைவதும்
எத்தனை வினோதம்
கொட்டிய வெண் மழையில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக