என்னை உருக்கி
என் கண்ணென நினைத்து
கருவிலிருந்தே
பக்குவம் இருந்து
பத்தியமுடனே
ஈன்று எடுத்த மகவே
பாலுட்டி
தினம் உணவு ஊட்டி
என் கனவும் கலந்து
உனக்கு ஊட்டி
கனவு நிஜமாகும்
நாளுக்காய்
காத்திருந்தேன்
நீயோ என் கருவான
உன் வாயில்
வெண் விறகுமூட்டி
கணம் ஒரு தவனம் காட்டி
கருகிய இதயமும்
கலங்கிய மூளையுமாய்
என்கண்முன்னே!!!
மகனே, மகளே
இதற்கா கண்விளித்து
கடமைசெய்து
பிஞ்சுப் பாதம்
நிலத்தில் விடாது
தாங்கித்திரிந்து
தவங்கிடந்தேன்
என் வேதனையில்
பங்கெடுத்து சாதனைகள்
செய்வீர்
சரீரம்மது வீழ்ந்தால்
சந்தனக் கொள்ளி வைப்பீர்
என்று நான் எண்ண!
நீயோ தினம்தோறும்
உயிருடனே உனக்கு
நீயே கொள்ளிவைகிறாய்
எனக்குமுன் போவதற்கா?
வேண்டாம்
ஒரு தாயுக்கும்
இந்தநிலை
சேய்களே
விளியுங்கள்!!!
விளியுங்கள்!!!
