கவி
கவிதை கற்பனை குதிரை
ஓட்டுபவர் மனங்களில்
பிறக்கும் வேகம்
சிந்தனைக்கு விருந்து
சிறகடிக்கும் பருந்து
வார்த்தை நடனத்தின்
வர்ண வரியடக்கம்
தாளம் சேர்ந்தால்
மெருகூட்டும்
கற்பனை இதற்கு
வழிகாட்டும்
பிறக்கும்போது
பதிவு செய்தால்
சிறக்கும் கவி
உதித்தவர் மனங்களில்
சிலகாலம்
சுவைத்தவர் மனங்களில்
சுவை வாழும்
சொல்லநினைத்ததை
சுவைபடச்சொல்லுவதும் கவி
சாட்டையால் அடிப்பதுபோலும்
சமைக்கலாம்
சவாலுக்கும் அழைக்கலாம்
சாதிக்கவும் வைக்கலாம்
சரித்திரத்தையும் சொல்லலாம்
காதலர்கள் சேர்ந்துவிட்டால்
கடல்போல் பெருகிவரும்
கரையில்லாக்கவிதை
உலகத்தில்
உயிருள்ளவரை கவி வாழும் ...
கவி வாழும்
வாழ்க பல்லாண்டு.
நன்றி
அருளீசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக