எங்களூர் பூவரசை
கதியாலுக்கு நட்ட அந்த
கத்திவெட்டு கோடு கச்சேரி
கலகங்கள் பலதந்து
மேலும் கதியலும் தான் ஈன்று
கமக்காரன் கலப்பையும்மாகி
பயிர்நிலத்து சத்துமாகி
காளை ஓட்டும் சக்கரமாகி
இடியப்ப உரலுமாகி
ஈமத்து விறகுமாகி
இணையற்ற பலன் தந்த
எங்களூர் பூவரசு
நன்றியுடன்
அருளீசன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக