மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 1 மார்ச், 2010

பிரியமானவளே

உன் அறிமுகம் இல்லாமலே 
என்மேல் ஆசை கொண்டவளே 
உன்காதலை அறிந்து 
நான் விலகி விலகி சென்றாலும் 

பின் தொடர்ந்து தொடர்ந்து வந்தவளே 
என் மேல் பிரியமானவளே 
நி உன் இலக்கை அடையும் முன்பே 
முழுமையாக ஆழ எண்ணுகின்றாய் 
ஒருவிதத்தில் உன்னை விலத்திவிட 
எனது மனம் துடியாய் துடிக்கிறது 
ஆனால் நீயோ உன்காதலை 
என்னிடம் சொல்லும் போதே 
எனது காதலை நீங்கள் ஏற்றுக்கொண்டால் 
நான் உடன்கட்டை ஏறுவது 
முடிந்த முடிவு என்றாய் 
அன்று சொன்னதை 
எண்ணிப்பார்க்கும் போது 
உன்மேல் பரிதாபம் எனக்கு 
என்னை மாற்ற நினைத்தாலும் 
உன் ஆக்கிரமிப்பின் வேகம் 
என்னை வேறுக்கவைக்கிறது
என்மேல் பிரியமானவளே 
உனக்கு மட்டும் தான் -நான் 
சொந்தம் என்று எண்ணியதால் 
என் இளமையை பறிக்கின்றாய் 
உன் சுயநலத்தில் என் இளமை 
போகிறதே அதை நீ புரியாயோ.




நன்றியுடன் 
அருளீசன்.




  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக