மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 15 செப்டம்பர், 2011

வஞ்சம்

நெஞ்சம் புண்ணாக்க 
வஞ்சம் சுமந்து வசைபாடி 
பொங்கும் இன்பத்தால் 
மகிழ்வாகும் நெஞ்சங்களே 
எங்கும் பொங்கும் வஞ்சம் 
எம்மையும் சூழும் 
அன்று நெஞ்சமும் 
வலியால் வாடும் 
நாம் விதைத்த வஞ்சம் 
அவர்கள் நெஞ்சத்தையும் 
பாடாய் படுத்தியதை 
உணரும்  நெஞ்சம் 
வஞ்சம் கூறாது வாழும் .

வெள்ளி, 22 ஜூலை, 2011

சொல்பெருமை


கிளி தரும் மனனம் 
கண்டோம் 
அதற்கு உரைத்தவர் 
பெருமை கண்டு 
உலகமேவியந்தது ...
பெற்றவர்தம் 
பிள்ளையின் வாயால் 
பொல்லாத 
வார்த்தை 
கண்டோம் 
செப்பிய மாந்தர் 
நாம்தான் !
செய்பிழை 
அறியமாட்டோம் 
தெரிந்தும் 
திருந்தமாட்டோம் !
மனம் கொண்ட 
கர்வத்தின் 
வயிரம் 
மாந்தராய் நாம் 
வாழ வேண்டின் 
மாயயை விலக்க வேண்டும் .

திங்கள், 18 ஜூலை, 2011

வியாழன், 19 மே, 2011

துயர் நிறைந்த மே 18


இன விரோத சக்திகளும்
உலக வல்லாதிக்க்ரும்
ஒருங்கே இணைந்து
வெட்ட வெளி நிலத்தை

திங்கள், 25 ஏப்ரல், 2011

உயிருடன் கொள்ளி













என்னை உருக்கி
என் கண்ணென நினைத்து
கருவிலிருந்தே
பக்குவம் இருந்து
பத்தியமுடனே
ஈன்று எடுத்த மகவே
பாலுட்டி
தினம் உணவு ஊட்டி
என் கனவும் கலந்து
உனக்கு ஊட்டி
கனவு நிஜமாகும்
நாளுக்காய்
காத்திருந்தேன்
நீயோ என் கருவான
உன்  வாயில்
வெண் விறகுமூட்டி
கணம் ஒரு தவனம் காட்டி
கருகிய இதயமும்
கலங்கிய மூளையுமாய்
என்கண்முன்னே!!!
மகனே, மகளே
இதற்கா கண்விளித்து
கடமைசெய்து
பிஞ்சுப் பாதம்
நிலத்தில் விடாது
தாங்கித்திரிந்து
தவங்கிடந்தேன்
என் வேதனையில்
பங்கெடுத்து சாதனைகள்
செய்வீர்
சரீரம்மது வீழ்ந்தால்
சந்தனக் கொள்ளி வைப்பீர்
என்று நான் எண்ண!
நீயோ தினம்தோறும்
உயிருடனே உனக்கு
நீயே கொள்ளிவைகிறாய்
எனக்குமுன் போவதற்கா?
வேண்டாம்
ஒரு தாயுக்கும்
இந்தநிலை
சேய்களே
விளியுங்கள்!!!

திங்கள், 18 ஏப்ரல், 2011

தாஜெனும் கோவிலுக்காய்

பிறந்தசித்திரையில் 
நிறைந்த பவுர்ணமியில் 
தமைபிரிந்த அன்னையற்காய் 
தரணியில் ஓர்நாள் 
உள்ளத்தால் உயர்ந்த 
தாஜெனும் கோவிலுக்காய் 
ஓர்நாள் விரதமிருந்து 
பிண்டம் படையல் இட்டு
பிதிர் கொடுத்து 
தன்னை இந்த 
புவிக்கு அளித்த 
தாய்க்கு ஒரு நாளை 
கண்ணியம் கொண்டு 
தீர்க்கவல்லா கடனுக்காய் 
தியானித்து திருவடியை 
வணங்கி நிற்போம் 

புதன், 13 ஏப்ரல், 2011

தட்டுங்கள் திறக்கப்படும்

ஆசையும் ஆர்வமும் 
அலைமோதும்போது 
எவரஸ் மலை கூட 
எள்ளிலும் சிறிதாய் தோன்றும் 
எடுத்தடி உச்சியை காணும்  
எண்ணியது ஈடேறும் 
அரும்பான சிறுவனின் 
குறும்பான கேள்வியும் 
விடாமுயற்சியும் 
ஆறுதல் கொள்ளாதபோது  
அங்கே பிறந்தது  வழி 
ஆறுதல்படுத்தவென 
இணையத்தில் இணைந்து 
இணைத்தனர் ஆசையை 
சாந்தபட்டவர் சாதனை- தொடர 
முதல்வரே வந்தார் 
முடியும் என்றார் 
முடியாது என்பதை 
முடித்தே வைத்தார் 
ஒருநாள் ஆட்சியில் 
நான்கேவயது சிறுவன் 
நாற்காலி அமர்ந்தான் 
முடியாது என்றொன்று -இல்லை 
என்பதற்கு முன்னோடி இவனே 
அடுத்து வ்ருவவைகளையும் 
ஆராய்ந்து பாருங்கள் 
இரண்டேவயது 
உலகத்தை தொட்டு 
சாதனை செய்கிறார் 
சந்திராயன் விண்ணில் 
இவர்களோ மண்ணில் 
இதை உணர்ந்தால் 
நம்மவர்களும் 
விண்ணிலும் 
மண்ணிலும் .  

சனி, 2 ஏப்ரல், 2011

எண்ணங்களை பிரதிபலிக்க !!!

எண்ணங்களை பிரதிபலிக்க 
வண்ணங்களை தீட்டுகின்றோம் 
அறிவையும் வெளிப்படுத்தும் 
ஆற்றலையும் தோற்றிநிற்கும் 
அழகையும் உணர்த்தும் 
ஆபாசத்தையும் ஊட்டிநிற்கும் 
அழிவுகளையும் சித்தரிக்கும் 
ஆடைகளையும் அலங்கரிக்கும் 
வர்த்தகத்தையும் பெருக்கிநிற்கும் 
விளம்பரத்தையும் கவரவைக்கும் 
இத்தனைக்கும் மூலமான வண்ணம் 
எத்தனை கோடி மக்களின் 
மூலமான நம்பிக்கையில் 
கரிபூசும் செயல் ஒன்றாய் 
காலனியில் பதித்து 
காட்சிப்பொருளாக்கி 
கடைத்தெருவில் 
விற்றசெயல்கண்டு 
வேதனையின் பிரதிபலிப்பால் 
வேதும்பிஎளுதுகின்றேன் 
மீண்டும் ஒருமுறையேனும் 
எந்தமதங்களையும் 
புண்படுத்த எண்ணாதீர் 
தாழ்மையுடன் இதற்காய் 
தகுந்த வழிசமைப்பீர்

திங்கள், 14 பிப்ரவரி, 2011

காதலர் தினம்

இன்றைய நாளில் மதிப்பளிக்கும் மனிதன்
ஈடுஇணையில்லாத புனிதன்
உலகத்தில் எத்தனை பேர்காதல் செய்தோம்
அத்தனை பேரும் காதலை மதித்தோமா?
இறந்தபின்பும் அவர் கொண்ட காதலுக்குப்பெருமை  
இருந்துகொண்டும் காதலுக்கு நம்மால் சிறுமை
தவம் செய்த அந்தநல்ல மனிதனால்
நாம் கொண்ட காதலுக்கும் ஒரு சிறுதுளி பெருமை
நாம் மறந்தாலும்
அவர் செய்த காதல் நாம் செய்த காதலையும்
ஞாபகப்படுத்துகிறது
அந்தநல்ல மனிதனுக்கு நன்றி சொல்வோம்.
காதலை மறந்தவர்போல் நடிப்பவரும்
காதலை பொய்என்று சொல்போரும் கூட
மனசாட்சிக்கு கட்டுபட்டு
அவருக்கும், காதலுக்கும்
நன்றி சொல்வோம்.
 காதல் வாழ்க
காதலர்கள் வாழ்க