மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 18 ஜூலை, 2018

          வடை

         பாட்டி சுட்டவடை
         எங்கேதான் போச்சு
         காக்கை அதன் அலகால்
         களவாடிபோச்சு

         தூக்கிகொண்டு போன
         வடை என்னதான் ஆச்சு
         மரக்கிளை அமர்ந்து
         காக்கை உண்ணப் போச்சு
         இளைப்பாறும் நரிக்கு
         வடை மணந்தாச்சு
         முகந்து கண்டவடையை
         முழுதாய் உண்ண எண்ணி
         ககாக்கை பார்த்து
         கான கருங்குயிலே
         கவி ஒன்று தாரும்
         உன் கான மளழயில்
         மூழ்க வென்று கூற
         தந்திரத்தின் கூற்றுக்கு
         காக்கை ஏமாந்து பாட
         வடை வாய்தவற
         நரி வாயில் வடை
         இடமாறிப்போச்சு.

         பளைய பாடலில் பிறந்தது
                 அருள்ஈசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக