தமிழுக்கு ஒரு அருந்ததி
ஏழ்மை குடும்பத்தின்
எண்ணத்து அருந்ததியாய்
றாமர் ஈசுவரத்தில்
வந்து உதித்தார்
அப்துல்கலாம் எடுத்தஅடி
அத்தனையும் ஏணிப்படி
ஏழ்மையின் பிடியிலும்
எண்ணியதை அடைய
ஓயாத உணர்வுடன்
ஒன்றொன்றாய் வென்று
பெற்றோரை மகிழ்வித்த
பெருமகன் ஆனார்
கற்றலையும் கற்பித்தலையும்
கண்ணாக எண்ணியவர்
வின்ஞானி ஆனார்
வீரத்துக்கு விண் ஊர்ந்து
உந்து செலுத்தியும்
விவேகத்திற்காய்
செயற்க்கை கோள்
செய்மதியும் தந்து
பார் ஆழ எண்ணுவோர்க்கு
பதிலடி கொடுத்த
பேரறிவாளன்
பெருந்தலைவர் கலாம்
இவர் தமிழ் தாய்க்கு
இணையற்ற புகழ்வாரி
இந்திய திருநாட்டின்
குடியரசு தலைவர்
குலம்காத்த மாமனிதர்
கடைசி மூச்சுவரை
கற்றலுக்கும் கற்பித்தலுக்கும்
உயிரூட்டியே உயிர்திறந்தார் .
அருள்ஈசன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக